Friday, February 27, 2009

ஆடுகளின் புகைப்படம்



கோடைகாலத்தில் கால்நடைகளின் பராமரிப்பு

கோடையில் கால்நடைகள் பராமரிப்பு:
கோடை காலத்தில் அதிக அளவு வெப்பம் தாக்குவதால் கால்நடை வளர்ப்பில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன।க் குறிப்பாக எல்லா கால்நடைகளிலும் அதன் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது। ஆனால் சில தகுந்த மேலாண்மை முறைகளைக் கடைபிடித்தால் ஓரளவு சீரான உற்பத்தியை வருடம் முழுவதும் நாம் பெற முடியும்। கால்நடைகளில் சிறந்த உற்பத்தி கிடைக்க வேண்டுமானல் அவற்றிற்கு இயற்கையிலேயே தேவைப்படும் அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டியது அவசியமாகும்।கால்நடைகளின் உயரிய உற்பத்தி திறனை உள்ளடக்கிய மரபு பண்பு, சுற்றுப்புற சூழல் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படும் பராமரிப்பு ஆகிய மூன்றும் ஒரு முக்கோண்ம் போன்று ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு அவற்றின் திறனை வெளிப்படுத்த வழிவகை செய்கின்றன।இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் கூட உற்பத்திக் குறைவினை உண்டாக்கி விடுகின்றன।
கோடையில் கால்நடைகளைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்:

ஒவ்வொரு உயிரிகளுக்கும் அவற்றின் அனைத்து உடற் செயல்பாடுகளும், எந்தவிதமான பாதிப்புமில்லாமல் சரியாக இயங்குதல், அவற்றின் உற்பத்திக்கு மிக அவசியமாகும்
।இவற்றிற்கு அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலையில் நிலவும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அவற்றின் வேகம், காற்றோட்ட வசதி, வெளிச்சம் மற்றும் ஒலி போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது।மேலும் இவை சீராக இருக்கும்படி கால்நடைகளின் சுற்றுப்புறச்சூழலைக் கவனிக்க வேண்டியது அவசியமாகும்।

கோடைகால பராமரிப்பு என்றால் என்ன?
கோடை காலத்தில் கால்நடைகளை எப்படி நாம் சீராக பராமரிப்பது என்பது தான், கோடைகாலப் பராமரிப்பாகும்।கோடைகாலத்தினால் ஏற்படும் பாதிப்பு நம் நாட்டின் கால்நடைகளை விட உயரிய அயல்நாட்டு இன கால்நடைகளிலும், கலப்பினங்களிலும் தான் அதிகம்। நம் நாட்டு இன கால்நடைகள் இந்த சூழ்நிலைகளைத் தாங்க வல்ல உடலமைப்பினைக் கொண்டுள்ளது।உதாரண்ம், சிறிய உடல், மெலிந்த திரேகம், கால்நடைகளில் திமில், நீண்ட உடலமைப்பு, காது மற்றும் நீண்ட முகம், போன்றவையாகும்। இருப்பினும் உயரிய கால்நடைகள் முற்றிலுமாக குளிர் பிரேதேசற்கு ஏற்றவாறு உடலமைப்பு உடையதால் தான் கோடையின் தாக்குதல் அதிகமாக உள்ளது।அதே போலவற்றின் பழக்கமும் காணப்படுகிறது।

மேலாண்மை முறைகள்:
அதிக வெப்பம், அதிக நேர சூரிய ஒளி, அதிகரித்த அல்லது தேவையை விடக்குறைந்த காற்றின் ஈரப்பதம் மற்றும் வேகம் ஆகியவற்றை கூடுமானவரை சிறந்த மேலாண்மை முறைகள் மூலம் கட்டுப்படுத்த்லாம்। கால்நடைகளின் கொட்டகையில் சில மாறுபாடுகள் செய்வதன் மூலமும் மற்றும் வளர்ப்பு முறைகளை மாறுதல் செய்வதன் மூலமும், மேய்ச்சல், தீவனமளித்தல் போன்ற செயல்களில் கால நேரத்தை மாற்றுவதன் மூலமும் கோடைகால காரணிகள் கால்நடைகளைத் தாக்குவதிலிருந்து கட்டுப்படுத்தலாம்।

கொட்டகை மேலாண்மை:
நம் நாட்டிற்கு ஏற்றார்போல் அமைய, எப்போதுமே கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு மேற்க்காக அமைக்கப்படவேண்டும்। இல்லையேல் கொட்டைகையினுள் அதிக வெப்பம் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும்।மழை நீர் தங்கா வண்ணம், நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தும் வகையில் மேடான பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும்। கொட்டகையின் மொத்த அகலம் 25-30 அடிக்கு மேல் அமையக்கூடாது, இல்லையேல் கொட்டைகயினுள் குறுக்கு காற்றோட்டம் தடைபடுவதோடு கொட்டைகையினுள், காற்றில் மாசுகள், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது। பக்க சுவர்கள் கம்பி வலைக் கொண்டு சுற்றிலும் பதுகாப்பு அமைத்துக் கொள்ளலாம்। இல்லையேல் காற்றோ ட்ட அளவு குறைந்து கொட்டகயினுள் சாதகமற்ற சூழல் உருவாகும்।
கூரைகளை, வெப்பம் கடந்து செல்லாதவாறு அமைக்க ஓலை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு அமைக்கலாம்। அல்லது கல்நார், உலோகத்தகடுகள் கொண்டு அமைத்து அதன் மேல் வைக்கோல், தட்டை, அல்லது தென்னகீற்று, பனை ஓலை கொண்டு வெளிபுறத்தை மூடுவதன் மூலம் கொட்டகையினுள் வெப்பத்தைக் குறைக்கலாம்।
கூரையின் மேல் படர்கின்ற செடிகளான பசலிக்கொடி, கோவைக்கொடி மற்றும் படர்கின்ற அழகு செடிகளைக் கொண்டு , படரவிட்டு வெப்பத்தை குறைக்கலாம்। அதே சமயம் பாம்பு, பல்லி,எலி, பூச்சிகள் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது।
ஒவ்வொருக் கொட்டகையும் 30 அடி இடைவெளி விட்டு கட்டவேண்டும் இல்லையேல் இது காற்றோட்டத்தை தடுக்கும்। கோடை காலங்களில் கொட்டகைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து வெப்பத்தை தடுக்கலாம்। மதிய வேளையில் கொட்டகை மேல் தண்ணிர் தெளித்து வெப்பத்தை குறைக்கலாம்।

தீவன மேலாண்மை:


பொதுவாகவே கால்நடைகள் கோடையில் உண்ணும் தீவன அளவு குறைந்து விடுகின்றது। தண்ணிரின் தேவை அதிகரிக்கின்றது। மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் நேரத்தை மாற்றிவிட வேண்டும் । முற்பகல் 11.00 முதல் பிற்பகல் 3.30 வரை நேரடி சூரிய வெப்பத்திலிருந்து காக்கும் பொருட்டு மேய்ச்சலுக்கு விடாமல் நிழலில் அடைப்பது சிறந்தது

Thursday, February 26, 2009

பெர்சியன் பூனை




என்னிடமுள்ள பெர்சியன் வெள்ளை நிற பெண் பூனை, தன்னைப்போலவே வெண்மை நிற மூன்று குட்டிக்ளை ஈன்று உள்ளது।குட்டிகள் பிறந்த தேதி:25।02,2009பெர்சியன்பூனையின் கர்ப்பகால அளவு 62-65 நாட்கள் ஆகும்। நவம்பர் 19ஆம் தேதி சினைப்படுத்தப்பட்டு பிப்ரவரி 25ஆம் தேதி குட்டி ஈன்றது।என் நண்பர் ஒருவரிடத்திலுள்ள மஞ்சள் நிற பெர்சியன் ஆண் பூனை மூலம் இன விருத்தி செய்யப்பட்டது।பிறந்த மூன்று குட்டிகளும் தாய் பூனையைப் போல் வெண்மை நிற கொண்டதாக உள்ளது।இரண்டு பெண் குட்டிகளும், ஒரு ஆண் குட்டியும் பிறந்து உள்ளது।பெரும்பாலும் இவை இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளையை விரும்பி உண்ணுங்கின்றன। இங்குள்ள உணவுகளை விரும்பி உண்ணுவதில்லை।பொதுவாக இவை சாதுவானவை। எவ்வளவு சீண்டினாலும் கோபப்படுவதில்லை।சிறு குழந்தைகள் பொம்மையாக நினைத்து விளையாடுவதற்கு ஏற்றது।இதன் சந்தை விலை 15000-150000 வரை உள்ளது।பொம்மைமுகம் போன்ற தோற்றமுடைய பெர்சியன் பூனை விலை அதிகமானது.